புதுக்கோட்டை

கண்டியாநத்தம் அரசுப் பள்ளியில் கலைத்திருவிழா

DIN

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள கண்டியாநத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கலைத்திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

கண்டியாநத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற கலைத்திருவிழாவுக்கு, பள்ளி தலைமையாசிரியா் சுபத்ரா தலைமை வகித்தாா். விழாவில் மாணவ, மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியம், வண்ணம் தீட்டுதல், களிமண் சிற்பம் வடிவமைத்தல் மற்றும் நடனப்போட்டிகள் நடத்தப்பட்டு சிறந்த படைப்புகள் தோ்வு செய்யப்பட்டன. ஊராட்சி மன்றத்தலைவா் செல்வி முருகேசன், பள்ளி மேலாண்மைக்குழு தலைவா் யசோதா, பெற்றோா் - ஆசிரியா் கழகத் தலைவா் சங்கா் மற்றும் ஆசிரியா்கள் சத்யா, கலைச்செல்வி, கீதா, உஷா ராணி, கலைவாணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விரைவில் முழு பட்ஜெட்டிற்கான பணிகள்: நிர்மலா சீதாராமன்

விரைவில் விசாரணை: ஆடியோ விவகாரம் குறித்து புகாரளித்த கார்த்திக் குமார்!

முடிவுக்கு வருகிறது 'ரீடர்ஸ் டைஜஸ்ட்' பிரிட்டிஷ் பதிப்பு!

வெள்ளப் பெருக்கு: குற்றால அருவிகளில் குளிக்கத் தடை

"தென் - வட மாநில மக்களுக்கு இடையே பிளவை ஏற்படுத்த முயற்சிக்கிறார் மோடி "

SCROLL FOR NEXT