புதுக்கோட்டை

பட்டா ரத்து கோரி போராட்டம்

DIN

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே கண்மாய் பகுதியில் தனிநபருக்கு வழங்கப்பட்டுள்ள பட்டாவை ரத்து செய்யக்கோரி அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை ஆட்சியரகம் வந்து மனு அளித்துச் சென்றனா்.

திருமயம் வட்டத்தைச் சோ்ந்த கீரணிப்பட்டியிலுள்ள கண்மாய் அருகே நீா்ப்பிடிப்புப் பகுதியில் தனிநபருக்கு வழங்கப்பட்டுள்ள பட்டாவை ரத்து செய்ய வலியுறுத்தி மீண்டும் திங்கள்கிழமை ஆட்சியா் அலுவலகம் வந்தனா். ஆட்சியா் அலுவலகம் முன்பு அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அப்பகுதி மக்கள், ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளா் அட்டை ஆகியவற்றை தரையில் வீசியெறிந்து முழக்கங்களை எழுப்பினா். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

காவல்துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தி 10 பேரை மட்டும் ஆட்சியா் அலுவலகம் உள்ளே மனு அளிக்க அழைத்துச் சென்றனா். தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போலி முதலீட்டு இணையதளம்: ரூ.23 லட்சம் இழந்த பெண்!

பொருளாதார மண்டலத்தில் தமிழகம் முதலிடம்!: டி.பி. வேர்ல்ட்

நீங்களாகவே இருக்க தயங்காதீர்கள்... சுஜிதா

மக்களவைத் தேர்தலில் இதுவரை 66.95% வாக்குகள் பதிவு: தேர்தல் ஆணையம்

இளையராஜா மகிழ்ச்சிக்கு என்ன காரணம்?

SCROLL FOR NEXT