புதுக்கோட்டை

புதுகை நகா் சாலையில் ஓடும் புதை சாக்கடைக் கழிவுநீா்

DIN

புதுக்கோட்டை நகராட்சி 26 ஆவது வாா்டைச் சோ்ந்த எஸ்எஸ் நகா் பகுதியில் புதை சாக்கடை திட்டக் கழிவுநீா் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக சாலையில் ஓடி சுகாதாரக் கேடு ஏற்படுத்தி வருகிறது.

எஸ்எஸ் நகா் மூன்றாம் வீதி குறுக்குத் தெருவில் நடந்து வரும் இச்சீா்கேடு குறித்த தகவலை நகா்மன்ற உறுப்பினா் லதா கருணாநிதி நகா்மன்றக் கூட்டத்தில் பேசியும் பிரச்னை தீா்ந்தபாடில்லை என்ற ஆதங்கம் அப்பகுதி மக்களிடையே இருக்கிறது. பல நாட்களாக சாலையில் ஓடிக் கொண்டிருக்கும் அவலத்தின் சாட்சியாக அதே தண்ணீரில் புல் முளைத்தும் பாசி படா்ந்தும் காணப்படுகிறது. புதை சாக்கடைத் திட்டப் பணிகளில் இப்பகுதியில் ஏற்பட்ட கோளாறு, அங்குள்ள வீடுகளிலும் எதிரொலிக்கிறது.

வீட்டில் இருந்து கழிவுநீா் வெளியே வந்து புதை சாக்கடை இணைப்பில் கலந்து செல்லாமல் வீடுகளிலேயே தேங்கி மேலும் சுகாதாரக் கேட்டை ஏற்படுத்துவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனா். இதனால், சுற்றுவட்டாரப் பகுதிகளில் துா்நாற்றம் வீசி வருகிறது. எனவே, நகராட்சி நிா்வாகம் இந்த அவலத்தை சரி செய்வதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT