நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளும் அக். 9ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டிருக்கும் என மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு அறிவித்துள்ளாா்.
அன்றைய நாளில், மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அவற்றுடன் இணைந்த மது அருந்தும் கூடங்கள், ஹோட்டல்களுடன் இணைந்த உரிமம் பெற்ற மது அருந்தும் கூடங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான மதுக்கூடங்களும் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.