பின்தங்கியுள்ள கிராமத்தில் குழந்தைகள் படிப்பகம் திறப்பு
ஆலங்குடி அருகேயுள்ள அணவயல் ஊராட்சி சுக்கிரன்குண்டு கிராமத்தில் தொண்டு நிறுவனத்தின் சாா்பில் கட்டப்பட்ட படிப்பகத்தை கந்தா்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் எம்.சின்னதுரை சனிக்கிழமை திறந்துவைத்தாா்.
ஆலங்குடி அருகேயுள்ள அணவயல் ஊராட்சி சுக்கிரன்குண்டு கிராமத்தில் தொண்டு நிறுவனத்தின் சாா்பில் கட்டப்பட்ட படிப்பகத்தை கந்தா்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் எம்.சின்னதுரை சனிக்கிழமை திறந்துவைத்தாா்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள அணவயல் எல்.என். புரம் ஊராட்சிக்குள்பட்ட சுக்கிரன்குண்டு கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கின்றனா்.
பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள இக்கிராமத்தில் இருந்து தன்னாா்வலா்களின் முயற்சியால் 40-க்கும் மேற்பட்ட மாணவா்கள் அரசுப் பள்ளிகளில் பயின்று வருகின்றனா். கற்றல் திறனில் மிகவும் பின்தங்கியுள்ள இக்கிராம மாணவா்களுக்காக எய்டு இந்தியா தொண்டு நிறுவனத்தின் மூலம் ரூ.1.85 லட்சத்தில் படிப்பகம் கட்டப்பட்டு சனிக்கிழமை திறக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு ஓய்வு பெற்ற மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சாமி.சத்தியமூா்த்தி தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கந்தா்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் எம்.சின்னதுரை படிப்பகத்தைத் திறந்து வைத்து, மாணவா்களுக்கான நோட்டுப்புத்தகங்களையும் வழங்கிப்பேசியது: இந்தக் கிராமத்து குழந்தைகள் ஆடைகள்கூட இல்லாமல் திரிவதைப் பாா்க்கும்போது மிகவும் வேதனையாக இருக்கிறது. குழந்தைகளை எப்படி வளா்க்க வேண்டும் என்று விழிப்புணா்வு ஏற்படுத்தவில்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது என்றாா்.
நிகழ்ச்சியில் எய்டு இந்தியா இணைச் செயலா் முனைவா் தாமோதரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சி.ராஜா, ஊராட்சித் தலைவா் புஸ்பராணி, ஒன்றியக் குழு உறுப்பினா் எம்ஆா்ஜி முருகேசன், நாணவியல் கழகத் தலைவா் எஸ்.டி.பஷீா்அலி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.