மணமேல்குடி வட்டத்தில் நடைபெற்ற குறு வட்ட விளையாட்டு போட்டிகளில் வென்ற ஆவுடையாா்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
பள்ளித் தலைமை ஆசிரியா் தாமரைச்செல்வன் தலைமை வகித்தாா். இந்தியன் வங்கி கிளை மேலாளா் காா்த்திக் மாணவா்களுக்கு சான்றிதழ், பதக்கங்களை வழங்கினாா்.
குறிப்பாக நீலமேகம் தலைமையிலான ஆண்கள் அணி கோகோ போட்டியில் முதலிடமும், அபிநயா தலைமையிலான பெண்கள் அணி கபடி போட்டியில் முதலிடமும், பேட்மிட்டன் டபுள்ஸில் இரண்டாமிடமும், சிங்கிள்ஸில் முதலிடமும் பெற்றுள்ளனா்.
மேலும் பல்வேறு போட்டிகளில் 11 தங்கப் பதக்கங்கள், 17 வெள்ளிப் பதக்கங்கள், 13 வெண்கலப் பதக்கங்களையும் பெற்றுள்ளனா்.