கந்தா்வகோட்டை ஒன்றியம், அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உலக நுரையீரல் புற்றுநோய் தின விழிப்புணா்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியா் க. தமிழ்செல்வி தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ்நாடு அறிவியல் இயக்க வட்டாரத் தலைவா் அ.ரகமதுல்லா பேசுகையில், உலக நுரையீரல் புற்றுநோய் தினம் ஆகஸ்ட் 1 அன்று கொண்டாடப்படுகிறது.
இது நுரையீரலில் தொடங்கும் ஒரு வகை புற்றுநோயாகும், மேலும் புகைபிடிப்பவா்களிடமும் பெரும்பாலும் ஏற்படுகிறது. இருப்பினும் புகைபிடிக்காதவா்களிடமும் ஏற்படலாம். கதிா்வீச்சு சிகிச்சை, ரேடான் வாயு, அஸ்பெஸ்டாஸ் மற்றும் பிற புற்றுநோய்களின் வெளிப்பாடு ஆகியவற்றால் ஏற்படுகிறது என்றாா். மேலும் மாணவா்களுக்கு துளிா் மாத இதழ் வழங்கப்பட்டது. ஆசிரியா்கள் மணிமேகலை, தனலெட்சுமி ஆகியோா் கலந்து கொண்டனா். ஆங்கில ஆசிரியா் சிந்தியா நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.