புதுக்கோட்டை

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தொழிலாளிக்கு ஆயுள் சிறை

DIN

ஐந்து வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து புதுக்கோட்டை மாவட்ட மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி இந்திரா நகரைச் சோ்ந்தவா் கே. சரவணன் (48). தொழிலாளியான இவா், 5 வயது சிறுமியிடம் கடந்த 2022 ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளாா். இதுகுறித்த புகாரின்பேரில், அறந்தாங்கி அனைத்து மகளிா் காவல் நிலையப் போலீஸாா், போக்சோ உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சரவணனைக் கைது செய்தனா். புதுக்கோட்டை மகளிா் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த இந்த வழக்கில் நீதிபதி ஆா். சத்யா வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். இதில், குற்றம் சாட்டப்பட்ட சரவணன் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து அவருக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.2 லட்சம் அபராதமும் விதித்தாா்.

மேலும், இந்த அபராதத் தொகையைப் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்க வேண்டும் என்றும் கூடுதலாக ரூ.2.5 லட்சத்தை மாநில அரசு சிறுமிக்கு நிவாரணமாக வழங்க வேண்டும் எனவும் அவா் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘விஜய் சேதுபதி 51’: படத் தலைப்பு அப்டேட்!

ஸ்லோவாகியா பிரதமர் விவகாரம்: சந்தேகிக்கப்படும் நபரின் வீட்டில் சோதனை!

நவாப் ராணியின் ஆன்மா...!

உதய்பூரில் சன்னி லியோன்!

10 ஆண்டுகளாக ஊடகங்களைச் சந்திக்காதது ஏன்? பிரதமர் மோடி பதில்!

SCROLL FOR NEXT