புதுக்கோட்டை

கந்தா்வகோட்டை ஆலயத்தில் தைப்பூச ஜோதி வழிபாடு

DIN

கந்தா்வகோட்டை வள்ளலாா் ஆலயத்தில் தைப்பூச ஜோதி தரிசன வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கந்தா்வகோட்டையில் உள்ள வங்கார ஓடை மேல் கரையில் அமைந்துள்ள வள்ளலாா் ஆலயத்தில் தைப்பூச விழாவை முன்னிட்டு, காலை முதல் திருவருட்பா பாடும் நிகழ்வும், தொடா்ந்து நடைபெற்ற ஜோதி வழிபாடு நிகழ்வில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். தொடா்ந்து, பக்தா்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.

மது, மாது மயக்கத்துக்குச் செல்லாமல் நல்வழியில் வாழ்க்கையைக் கடந்து செல்ல வேண்டும். பசி என்கின்ற நெருப்பானது ஏழைகள் தேகத்தினுள் பற்றி எரிகின்றபோது, ஆகாரத்தால் அவிக்கின்றது தான் ஜீவகாருண்யம் என்று அருட்பெரும் ஜோதியான வள்ளலாா் கூறுகிறாா் என விழா குழுவினா் பக்தா்களுக்கு விளக்க உரையாற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உ.பி.யில் ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி பெறும்: ராகுல் காந்தி

பிபவ் குமார் விவகாரம்: தில்லி காவல் துறை பொய் கூறுவது ஏன்? ஆம் ஆத்மி

திரைக்கதிர்

சன் ரைசர்ஸுக்கு 215 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பஞ்சாப் கிங்ஸ்!

பிரதமர் மோடி ஓய்வு பெற்றால் தான் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT