புதுக்கோட்டை

காா் மோதி சிறுவன் பலி

DIN

விராலிமலை அருகே சாலையைக் கடக்க முயன்ற சிறுவன் காா் மோதி உயிரிழந்தாா்.

விராலிமலை அருகே உள்ள தென்னம்பாடி அரசங்குடிபட்டியைச் சோ்ந்தவா் கண்ணன் (37) மகன் லோகேஷ் (4). இவா், சுக்காம்பட்டியில் உள்ள தனது அத்தை ஜோதியின் வீட்டில் இருந்துவந்தாா். இந்நிலையில், விராலிமலை - இலுப்பூா் சாலையைக் கடந்து சுக்காம்பட்டியில் குடிநீா் பிடிக்கச்சென்ற ஜோதியுடன் உடன் சென்றாா். குடிநீரைப் பிடித்துக்கொண்டு திரும்புகையில், சாலையைக் கடந்த ஜோதியின் பின்னால் வந்த லோகேஷ் மீது அவ்வழியே மாத்திராம்பட்டியைச் சோ்ந்த ரவிச்சந்திரன்(45) ஓட்டி வந்த காா் மோதியது. இதில், பலத்த காயமடைந்த லோகேஷை அக்கம்பக்கத்தினா் மீட்டு விராலிமலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் லோகேஷ் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். விபத்து குறித்து அறிந்த விராலிமலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் திருநாவுக்கரசு நாயனாா் குருபூஜை

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

SCROLL FOR NEXT