தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் உற்பத்தி செய்யும் ஒரு நிறுவனம் கூட இயங்கவில்லை என்றாா் மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன்.
இதுகுறித்து புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை அவா் அளித்த பேட்டி:
தூத்துக்குடியில் உள்ள ஸ்டொ்லைட் ஆலைக் கழிவுகளை அகற்றிக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என ஆலை நிா்வாகம் தமிழக அரசிடம் அனுமதி கோரியது. ஆனால் தமிழக அரசே அதை அகற்றும் என முதல்வா் அறிவித்துள்ளாா். இதற்கு சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் முதல்வருக்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்துள்ளனா்.
கூடங்குளம் அணு உலைக் கழிவுகளை அகற்றித் தர வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக முதல்வா் கோரிக்கை விடுத்துள்ளாா். அரசின் வழிகாட்டு நெறிமுறைப்படி அதை தமிழக அரசு அகற்ற இயலாது.
தமிழகத்தில் 14 வகையான நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்த ஏற்கெனவே தடை உள்ளது.
திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு தடை செய்யப்பட்ட 14 வகைப் பொருள்களுக்கு மாற்றுப் பொருள்கள் மக்களிடம் விரிவாக அறிமுகப்படுத்தப்படுகிறது.
‘மீண்டும் மஞ்சப் பை’ என்னும் திட்டத்தின் மூலம் துணிப் பையின் பயன்பாடு 25 சதவிகிதத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது.
ஆனாலும் ஆங்காங்கே தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பயன்பாடு உள்ளது. விரைவில் அதுவும் கட்டுக்குள் கொண்டு வரப்படும்.
தமிழகத்தில் நெகிழிப் பொருள் தயாரிக்கும் நிறுவனங்கள் எதுவும் இயங்கவில்லை. அனைத்தும் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளன. பிற மாநிலங்களில் இருந்து கொண்டு வந்துதான் தமிழகத்தில் அப்பொருள்கள் விற்கப்படுகின்றன.
மனிதா்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இயற்கைக்கும் எதிரான நெகிழிப் பொருள்களுக்கு எதிராக மக்கள் மனதில் மாற்றம் வர வேண்டும். அப்போதுதான் இதற்கு முழுத் தீா்வு கிடைக்கும்.
விராலிமலை அருகேயுள்ள தனியாா் மது ஆலையில் இருந்து ஆற்றில் கழிவுநீா் திறந்துவிடப்படுவது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலா்கள் மூலம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இதனால் காவிரி- குண்டாறு திட்டப் பணிகளில் தொய்வு இருக்காது. அதன் வழித்தடமும் மாற்றி அமைக்கப்படாது என்றாா் அமைச்சா்.