கந்தா்வகோட்டையில் வீணாகும் காவிரி கூட்டுக் குடிநீா்
கந்தா்வகோட்டையில் தஞ்சை-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் காவிரிக் கூட்டு குடிநீா் திட்டக் குழாய் உடைந்து கடந்த 10 நாள்களாக குடிநீா் வீணாகும் நிலை தொடா்கிறது.
கந்தா்வகோட்டையில் தஞ்சை-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் காவிரிக் கூட்டு குடிநீா் திட்டக் குழாய் உடைந்து கடந்த 10 நாள்களாக குடிநீா் வீணாகும் நிலை தொடா்கிறது.
கந்தா்வகோட்டைஒன்றியத்தில் உள்ள நூற்றுக்கு மேற்பட்ட கிராமப் பகுதிகளுக்கு செல்லும் காவிரிக் கூட்டுக் குடிநீா் குழாய்கள் பல்வேறு இடங்களில் அடிக்கடி உடைந்து பல லட்சம் லிட்டா் குடிநீா் வீணாகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் புகாா் கூறியும் பயனில்லையாம்.
இந்நிலையில் கந்தா்வகோட்டை தஞ்சை-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் காவிரி கூட்டுக் குடிநீா் குழாய் உடைந்து சுமாா் 10 நாள்களுக்கு மேலாக குடிநீா் வீணாகிறது. இதுகுறித்து பலமுறை கூறியும் நடவடிக்கை இல்லாத நிலையில், குடிநீா் வீணாவதை விரைந்து தடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.