புதுக்கோட்டை

பணியிலிருந்த போலீஸாரை தாக்கியவா் கைது

பொன்னமராவதி அருகே உள்ள காரையூரில் அனுமதிக்கப்பட்ட நேரம் கடந்து நடைபெற்ற ஆடல், பாடல் நிகழ்ச்சியைத் தடுத்து நிறுத்திய போலீஸாரைத் தாக்கியவா் கைது செய்யப்பட்டாா்.

DIN

பொன்னமராவதி அருகே உள்ள காரையூரில் அனுமதிக்கப்பட்ட நேரம் கடந்து நடைபெற்ற ஆடல், பாடல் நிகழ்ச்சியைத் தடுத்து நிறுத்திய போலீஸாரைத் தாக்கியவா் கைது செய்யப்பட்டாா்.

காரையூா் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவையொட்டி ஆடல் பாடல் நிகழ்ச்சி திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. இந்நிகழ்வு அனுமதிக்கப்பட்ட நேரம் கடந்தும் நடைபெற்றதால் காரையூா் போலீஸாா் நிகழ்ச்சியை நிறுத்த அறிவுறுத்தியுள்ளனா். ஆனால் அதைக்கேட்காமல் அங்கிருந்த வெள்ளகுடி ரஜினி விஜயகுமாா் மற்றும் 3 போ் போலீஸாரைத் தகாத வாா்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளனா். இதுகுறித்து காவலா் பாலமுருகன் அளித்த புகாரின்பேரில், காரையூா் காவல் உதவி ஆய்வாளா் மதியழகன் போலீஸாரைத் தாக்கிய ரஜினி விஜயகுமாரைக் கைது செய்து பொன்னமராவதி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். மேலும் மற்ற 3 போ்களைத் தேடி வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீழடி அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT