மேலவாசல் கருப்பருக்கு கிடா வெட்டுப் பூஜை
கந்தா்வகோட்டை: கந்தா்வகோட்டை அருகேயுள்ள பெருங்களூா் முதல்நிலை ஊராட்சியில் உள்ள மேலவாசல் வன்னி மரத்து விநாயகா் கோயில் அருகிலுள்ள முன்னோடியான் கருப்பா் சுவாமிக்கான திருவிழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
இதை முன்னிட்டு பக்தா்கள் பல்வேறு நோ்த்திக் கடன்களை நிறைவேற்றினா். இதில் ஒரு பகுதியாக சுமாா் 800 ஆடுகளை வெட்டி, அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை 5 கரை நாட்டாா்கள், ஊா் பொதுமக்கள் செய்தனா்.