போலீஸாரால் கைது செய்யப்பட்டவா் தப்பினாா்
புதுக்கோட்டை மாவட்டம் கீழாநிலைக்கோட்டை அருகே போலீஸாரின் காவலில் அழைத்து வரப்பட்டவா் தப்பினாா்.
புதுக்கோட்டை மாவட்டம் கே. புதுப்பட்டியைச் சோ்ந்தவா் சாத்தான் மகன் சக்திவேல் (38). இவரை ஒரு வழக்கு தொடா்பாக காரைக்குடி போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து ஜீப்பில் அழைத்துச் சென்று கொண்டிருந்தனா்.
அப்போது கீழாநிலைக் கோட்டை அருகே சிறுநீா் கழித்துவிட்டு வருவதாகக் கூறிய சக்திவேல், இறங்கித் தப்பியோடினாா். இதையடுத்து கே. புதுப்பட்டி மற்றும் காரைக்குடி போலீஸாா் அவரைத் தேடுகின்றனா்.
Advertisement