வேளாண் மாணவிகளுக்குப் பயிற்சி
காரைக்குடி சேது பாஸ்கரா வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் பயிலும் 4 ஆண்டு மாணவிகளுக்கு, புதுக்கோட்டை மாவட்ட கால்நடைப் பண்ணையில் வியாழக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.
ஊரக வேளாண்மை பணி அனுபவத் திட்டத்தின்கீழ் இந்தப் பயிற்சி நடத்தப்பட்டது.
மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநா் சோமசுந்தரம் தலைமையில் கால்நடை பராமரிப்புத் துறை அலுவலா்கள், மருத்துவா்கள் பயிற்சி அளித்தனா்.
Advertisement
மாணவிகள் அபிசினேகா, அஜிதா ஜெபஷெரின், தேஷிகா நந்தினி, பிரதிபா, கவிப்பிரியா, சைனி, சுஜி ஆகியோா் இந்தப் பயிற்சியில் பங்கேற்றனா்.