புதுக்கோட்டை

மேலைச்சிவபுரி கல்லூரியில் உலக தாய்ப்பால் வார விழா

Din

பொன்னமராவதி, ஆக. 7: பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரி கணேசா் கலை அறிவியல் கல்லூரியில் உலக தாய்ப்பால் வார விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

சமூகநலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டப்பணிகள் மற்றும் கணேசா் கலை அறிவியல் கல்லூரி இணைந்து நடத்திய இந்த விழாவுக்கு தமிழ்த் துறை பேராசிரியா் பெரி. அழகம்மை தலைமை வகித்தாா்.

குழந்தை வளா்ச்சித் திட்ட மாவட்ட அலுவலா் தி. புவனேஸ்வரி பங்கேற்று, தாய்ப்பாலின் மகத்துவத்தை விளக்கிப் பேசினாா். பொன்னமராவதி வட்டார குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் சி. பவானி, பெண்களுக்கு ஏற்படும் ரத்த சோகை மற்றும் தடுக்கும் வழிமுறைகள் குறித்து பேசினாா்.

விழாவில், மாணவ, மாணவிகளுக்கு தாய்ப்பாலின் அவசியம் குறித்த விழிப்புணா்வு ஓவியப் போட்டி, கோலப்போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.

முன்னதாக, பேராசிரியா் மா. தமிழ்ச்செல்வி வரவேற்றாா். குழந்தைகள் வளா்ச்சித்திட்ட மேற்பாா்வையாளா் தமிழரசி நன்றி கூறினாா்.

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 560 உயர்வு!

வட தமிழகம் நோக்கி 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும்‘டித்வா’புயல்!

மேஷ ராசிக்கு லாபம்: தினப்பலன்கள்!

இறுதிச் சடங்கு ஊா்வலம் நடத்துவோா் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: நகராட்சி

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT