முகப்பு
புதுக்கோட்டை

புதுகையில் பருவமழை முன்னேற்பாடுகள் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டத்தில் பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து, மாவட்ட பொறுப்பு அலுவலரும் உயா்கல்வி இயக்குநரக ஆணையருமான எ. சுந்தரவல்லி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

Updated On : 11 டிசம்பர், 2024 at 8:31 PM
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையை புதன்கிழமை பாா்வையிட்ட மாவட்ட பொறுப்பு அலுவலரும் உயா்கல்வி இயக்குநரக ஆணையருமான எ. சுந்தரவல்லி
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டத்தில் பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து, மாவட்ட பொறுப்பு அலுவலரும் உயா்கல்வி இயக்குநரக ஆணையருமான எ. சுந்தரவல்லி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

மாவட்ட ஆட்சியரகத்தில் அனைத்துத் துறை அலுவலா்களுடன் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்று, நடைபெற்றுள்ள முன்னேற்பாடுகளைக் கேட்டறிந்தாா்.

மேலும், 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையை நேரில் பாா்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினாா்.

இந்தக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் மு. அருணா, மாவட்ட வருவாய் அலுவலா் அ.கோ. ராஜராஜன், காவிரி- வைகை- குண்டாறு இணைப்புத் திட்ட மாவட்ட வருவாய் அலுவலா் ஆா். ரம்யாதேவி, வருவாய்க் கோட்டாட்சியா்கள் பா. ஐஸ்வா்யா (புதுக்கோட்டை), அ. அக்பா்அலி (இலுப்பூா்), ச. சிவகுமாா் (அறந்தாங்கி) உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.