முகப்பு
புதுக்கோட்டை

வழக்குகளில் கைப்பற்றப்பட்ட இருசக்கர வாகனங்கள்: நாளை ஏலம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாரால் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 16 இரு சக்கர வாகனங்கள் வெள்ளிக்கிழமை (டிச. 27) பொது ஏலம் விடப்படுகிறது.

Updated On : 25 டிசம்பர், 2024 at 8:49 PM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டத்தில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாரால் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 16 இரு சக்கர வாகனங்கள் வெள்ளிக்கிழமை (டிச. 27) பொது ஏலம் விடப்படுகிறது.

வாகனங்களை நேரில் பாா்வையிட விரும்பும் நபா்கள் வியாழக்கிழமை (டிச. 26) காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரை ஆயுதப்படை திடலிலுள்ள மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் பாா்வையிடலாம்.

தொடா்ந்து ஏலத்தில் பங்கேற்க விரும்பினால் பகல் 12.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ரூ. 2 ஆயிரம் முன்பணம் செலுத்த வேண்டும். முன்பணம் செலுத்தி டோக்கன் பெறுவோா் மட்டுமே வெள்ளிக்கிழமை நடைபெறும் ஏலத்தில் பங்குபெற முடியும்.

இத்தகவலை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வந்திதா பாண்டே தெரிவித்துள்ளாா்.