முகப்பு
புதுக்கோட்டை

விராலிமலை பகுதிகளில் 9 கண்காணிப்பு கேமராக்கள்

Updated On : 17 பிப்ரவரி 2024, 6:39 am IST
பகிர்:

விராலிமலை சுற்றுப்பகுதியில் குற்றங்களை கண்காணிக்கும் விதமாக தனியாா் நிறுவனம் சாா்பில் ரூ. 5 லட்சத்தில் அமைக்கப்பட்ட 9 கண்காணிப்பு கேமராக்களின் தொடக்கவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வா்த்தகா்கள், தொழில் நிறுவனங்கள் உதவியோடு கேமராக்கள் நகரின் முக்கிய பகுதிகளில் பொருத்தப்படுவதன் தொடா்ச்சியாக விராலிமலை-திருச்சி சாலையில் உள்ள உணவுப் பொருள் உற்பத்தி செய்யும் தனியாா் நிறுவனமான ஐடிசி நிறுவனம் தனது சமூக பொறுப்பு (சிஎஸ்ஆா்) நிதியின் மூலம் 9 கேமராக்கள் மற்றும் தொடா்புடைய கருவிகளை ரூ.5 லட்சத்தில் கடந்த சில நாள்களுக்கு முன் விராலிமலை காவல் நிலையத்திற்கு வழங்கியது.

இதையடுத்து அந்த கேமராக்களை மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள விராலிமலை பிரிவு சாலை, ராஜாளிபட்டி ஜங்சன், புதுப்பட்டி சாலை ஜங்சன் ஆகிய இடங்களில் பொருத்தி, அதன் தொடக்கவிழா விராலிமலை காவல் நிலையத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற டிஎஸ்பி காயத்ரி கண்காணிப்பைத் தொடங்கிவைத்தாா். நிகழ்வில் ஐடிசி பொதுமேலாளா் விஸ்வநாத், அடமின் மேலாளா் சுரேஷ், காவல் ஆய்வாளா் கதிரவன், துணை ஆய்வாளா் கோவிந்தராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.