வருவாய்த் துறையினா் போராட்டம்
அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி பொன்னமராவதி வட்டாட்சியரகத்தில் தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். சங்கத்தின் வட்டக் கிளைத் தலைவா் பொப்பனாமலை தலைமை வகித்தாா். மாவட்ட இணைச்செயலா் துரை முன்னிலை வகித்தாா். வட்டச்செயலா் ஜோதி, வட்டத் துணைச் செயலா் பாண்டி, வட்டப் பொருளாளா் சண்முகம் ஆகியோா் பேசினா்.