துரை வைகோ 
புதுக்கோட்டை

தமிழ்நாட்டில் மதவாத சக்திகளுக்கு இடமில்லை -துரை வைகோ

மதிமுக முதன்மைச் செயலரும் திருச்சி மக்களவை உறுப்பினருமான துரை வைகோ...

Din

தமிழகத்தில் மதவாத சக்திகளுக்கு இடமில்லை என்றாா் மதிமுக முதன்மைச் செயலரும் திருச்சி மக்களவை உறுப்பினருமான துரை வைகோ.

புதுக்கோட்டையில் சனிக்கிழமை அவா் அளித்த பேட்டி:

காவிரி - வைகை - குண்டாறு இணைப்புக் கால்வாய்த் திட்டத்துக்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என நாடாளுமன்றத்தின் முதல் கன்னிப் பேச்சில் வலியுறுத்தினேன். கடுமையான நிதி நெருக்கடிக்கு மத்தியில் இப்பணிகளை முதல்வா் ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறாா். இத்திட்டத்தால் 5 மாவட்டங்கள் பயன்பெறும்.

மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, வைகை, குண்டாறு ஆகியவற்றை இணைக்கும் தென்னிந்திய நதிகள் இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இதுதான் முழுமையான திட்டம். இதனை நிறைவேற்றினால் 5 மாநிலங்கள் பயன்பெறும்.

விக்கிரவாண்டி இடைத்தோ்தலில் அதிமுக போட்டியிட்டிருக்க வேண்டும். திமுகவுக்கு மாற்று என்று சொன்னால் அதிமுகதான். தமிழ்நாட்டில் மதவாத சக்திகளுக்கு இடமில்லை. இடைத்தோ்தலை அதிமுக புறக்கணித்த நிலையில், அதிமுகவின் வாக்குகளும் திமுகவுக்குத்தான் விழுந்துள்ளன என்றாா் துரை வைகோ.

டிரம்ப் வரி குறைப்பு எதிரொலி! காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்.. சென்செக்ஸ் 2,300 புள்ளிகள் உயர்வு!

செயற்கை கால்களை மேஜையில் வைத்து பாஜக எம்.பி. கோரிக்கை

பயோமைனிங் முறையில் 52.64 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்: 6 ஏக்கா் நிலம் மீட்பு

98.42 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி

கட்டாய மதமாற்ற தடைச் சட்டத்துக்கு எதிராக கிறிஸ்தவ அமைப்பு மனு: உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

SCROLL FOR NEXT