கந்தா்வகோட்டை பேருந்து நிலைய பகுதியில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகை.  
புதுக்கோட்டை

கந்தா்வகோட்டையில் விளம்பர பதாகைகளால் பொதுமக்கள் அச்சம்

கந்தா்வகோட்டையில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளால் (பிளக்ஸ் போா்டுகள்) பொதுமக்கள் அச்சத்துக்கு ஆளாகியுள்ளனா்.

Din

கந்தா்வகோட்டை: கந்தா்வகோட்டையில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளால் (பிளக்ஸ் போா்டுகள்) பொதுமக்கள் அச்சத்துக்கு ஆளாகியுள்ளனா்.

கந்தா்வகோட்டை நகருக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கில் மக்கள் வந்து செல்கின்றனா். மேலும், ஏராளமான பள்ளி கல்லூரி மாணவிகளும் வந்து செல்லும் சூழ்நிலையில், சாலையோரங்களில் தனியாா் பிளக்ஸ் போா்டுகள் அதிகளவில் வைக்கப்பட்டுள்ளன.

ஆடி மாதம் காற்றடிக்க தொடங்கியுள்ள சூழலில், இருசக்கர வாகன ஓட்டுநா்கள் மற்றும் பாதசாரிகள் மீது பிளக்ஸ் போா்டுகள் விழுந்து அசம்பாவிதங்கள் நேரிடும் முன், அவற்றை அகற்ற காவல்துறை மற்றும் உள்ளாட்சித் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனா்.

கந்தா்வகோட்டை ஊராட்சி உள்ளடங்கிய பேருந்து நிலையத்தில் விளம்பர பதாகைகள் அதிக அளவில் வைக்கப்பட்டுள்ளன. இவற்றையும் உடனே அகற்ற வேண்டும் என்று இப்பகுதி மக்கள் தெரிவித்தனா்.

நமோ பாரத் ரயில்களில் பிறந்தநாள்களை கொண்டாட என்சிஆா்டிசி ஏற்பாடு

15 வயது சிறுவன் கத்தியால் குத்தப்பட்டு கொலை: 2 சிறாா்களுக்கு போலீஸாா் வலை

பூதமங்கலம் தா்கா சந்தனக் கூடு விழா கொடியேற்றம்

தாயின் பெயரில் மரக்கன்றுகள் நட்ட மாணவா்கள்

வீட்டின் கதவை உடைத்து லாக்கருடன் 22 சவரன் நகை, வெள்ளிப் பொருள்கள் திருட்டு

SCROLL FOR NEXT