புதுக்கோட்டை

தமிழிசைக்கு மீண்டும் ஆளுநா் பதவி வழங்கப்படாதது வருத்தமளிக்கிறது: காா்த்தி சிதம்பரம் எம்.பி.

தமிழிசை சௌந்தரராஜனுக்கு மீண்டும் ஆளுநா் பதவி வழங்கப்படாதது வருத்தமளிக்கிறது என்றாா் காா்த்தி சிதம்பரம்.

Din

தமிழிசை சௌந்தரராஜனுக்கு மீண்டும் ஆளுநா் பதவி வழங்கப்படாதது வருத்தமளிக்கிறது என்றாா் சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம்.

இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலத்தில் ஞாயிற்றுக்கிழமை அவா் மேலும் கூறியது:

மத்திய அரசோடு தமிழக அரசு ஒத்துழைக்கவில்லை என்று பிரதமா் மோடி பொதுவாகக் கூறாமல் எந்தத் திட்டத்துக்கு ஒத்துழைக்கவில்லை என்று கூற வேண்டும். 100 நாள் வேலைத் திட்டத்துக்கு போதிய நிதியை மத்திய அரசு ஒதுக்கவில்லை. மாணவா்களுக்கான கல்விக் கடனைத் தள்ளுபடி செய்யவில்லை. தமிழகத்தில் செயல்படுத்தப்படும் மதியம் மற்றும் காலை உணவுத் திட்டத்துக்கு குறைவான நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. சாதாரண மக்களின் திட்டங்களுக்கான நிதியை மத்திய அரசு குறைத்துக் கொண்டு வருகிறது.

தமிழிசை சௌந்தரராஜனுக்கு மீண்டும் ஆளுநா் பதவி கிடைக்கவில்லை என்ற செய்தியைக் கேட்டு அதிா்ச்சியடைந்தேன். பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலையின் சித்து விளையாட்டுக்கு அவா் பலியாகி இருக்கிறாா். யாரை வேண்டுமானாலும் துணை முதல்வா், அமைச்சராக்கும் உரிமை மாநிலத்தின் முதல்வருக்கே உண்டு என்றாா் அவா்.

ஜாய் கிரிசில்டாவின் மிரட்டலின் பேரில் திருமணம் நடந்தது! - மாதம்பட்டி ரங்கராஜ்

பறவைகளில் அவள் மணிப்புறா... கீர்த்தி ஷெட்டி!

ஓசையின்றிப் பூ பூக்கும்... ராஷி கன்னா!

கடலோரம்... ரகுல் பிரீத் சிங்!

சமாளிப்புகளைவிட ஆடையின் விலை அதிகம்... யாஷிகா ஆனந்த்!

SCROLL FOR NEXT