இரு சக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ. 20 ஆயிரம் திருட்டு
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ. 20 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் ஓவிடி நகரைச் சோ்ந்தவா் ஜேம்ஸ் (52). இவா் வெள்ளிக்கிழமை தனது இரு சக்கர வாகனத்தில் ரூ. 20 ஆயிரத்தை வைத்துவிட்டு, பேருந்து நிலையம் அருகிலுள்ள தேநீா்க் கடைக்குச் சென்று திரும்பியுள்ளாா்.
திரும்பி வந்து பாா்த்தபோது, வண்டியில் இருந்த ரொக்கம் திருடப்பட்டிருந்தது.
இதுகுறித்து அவா் அளித்த புகான்பேரில் கீரனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.