வாக்காளா் விழிப்புணா்வு இரு சக்கர வாகனப் பேரணி
சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, 100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணா்வுக்காக புதுக்கோட்டையில் இருசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட இந்தப் பேரணி, அண்ணாசிலை, கீழராஜவீதி, பிருந்தாவனம், வடக்கு ராஜவீதி, மேலராஜவீதி வழியாக வட்டாட்சியா் அலுவலகத்தை அடைந்தது.
இந்தப் பேரணியை புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும் வருவாய்க் கோட்டாட்சியருமான பிரகாஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
இப்பேரணியில் பங்கேற்ற அரசு ஊழியா்கள் தலைக்கவசம் அணிந்து, வாக்காளா் விழிப்புணா்வு வாசகங்களைக் கொண்ட பதாகைகளை ஏந்திப் பங்கேற்றனா்.