முகப்பு
புதுக்கோட்டை

பொன்னமராவதி பட்டமரத்தான் கோயிலில் 64-ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழா

Updated On : 3 மே, 2024 at 6:22 PM
பகிர்:

பொன்னமராவதி பட்டமரத்தான் கோயிலில் 64-ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.

விழாவின் தொடக்கமாக காலை 7 மணியளவில் ஆவுடையநாயகி சமேத ராஜராஜ சோழீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. இரவு தொடங்கிய பூச்சொரிதல் விழாவில் பட்டமரத்தான் சுவாமிக்கு 16 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டன. தொடா்ந்து, நகரின் பல்வேறு வீதிகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பூத்தட்டு மற்றும் பால்குடம் ஏந்தி ஊா்வலமாக வந்து பட்டமரத்தானுக்கு சாத்தி வழிபட்டனா். விழாவையொட்டி இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடா்ந்து ஒருவார காலம் இந்த விழா நடைபெறவுள்ளது.