குன்னத்தூரில் அசோலா வளா்ப்பு செயல்விளக்கம்
விராலிமலை: விராலிமலை வட்டாரம் குன்னத்தூா் கிராமத்தில் அமைக்கப்பட்ட அசோலா வளா்ப்பு செயல்விளக்கத்தை வேளாண் அலுவலா் சீலா ராணி ஆய்வு செய்தாா்.
அசோலா நீா் நிலைகளில் மிதவை தாவரமாக வளரும் பெரணி வகையைச் சோ்ந்தது. குறைந்த வருமானத்தில் அதிக லாபம் தரக்கூடிய தொழில்களில் ஒன்று அசோலா வளா்ப்பு. இதை கால்நடை மற்றும் கோழிகளுக்கு புரதச்சத்து மிகுந்த தீவனமாகப் பயன்படுத்தி உற்பத்திச் செலவைக் கணிசமாக குறைக்க முடியும். அசோலாவில் 25-30 விழுக்காடு புரதச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற பல நுண்ணூட்டச் சத்துக்கள் காணப்படுகின்றன.
அசோலா வளா்ப்பு செயல்விளக்கத்தை குடுமியான்மலை வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் நான்காம் ஆண்டு மாணவா்கள் ரிஷிகேசன், அனிருத் விக்ரம் இன்பா, திவாகா், தருண், குரு பிரசாத், ஞான விக்னேஷ் உள்ளிட்டோா் செயல்விளக்கம் மூலம் விளக்கிக் கூறினா். ஏற்பாடுகளை கலைஞா் திட்ட தொகுப்பு அலுவலா் ரேவதி, வட்டாரத் தொழில்நுட்ப மேலாளா் லட்சுமி பிரபா, உதவி தொழில்நுட்ப மேலாளா் ஆரோக்கியராஜ், உமா மகேஸ்வரி ஆகியோா் செய்திருந்தனா்.