சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு
பொன்னமராவதி: பொன்னமராவதி வட்டார சிவாலயங்களில் பிரதோஷ நாளையொட்டி நந்தி எம்பெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத ராஜராஜ சோழீஸ்வரா் கோயிலில் நந்தி எம்பெருமான் மற்றும் ஆவுடையநாயகி சமேத சோழீஸ்வரா் கோயிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு, நந்திக்கு வெள்ளி அங்கி சாத்தப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இவ்விழாவில், சுற்றுவட்டாரப் பகுதிகளைச்சாா்ந்த திரளான பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனா். இதேபோல், வேந்தன்பட்டி நெய்நந்தீஸ்வரா் கோயில், திருக்களம்பூா் கதலிவனேஸ்வரா் கோயில், மேலைச்சிவபுரி மீனாட்சி சொக்கலிங்கேஸ்வரா் கோயில், புதுப்பட்டி புவனேஸ்வரி உடனாய பூலோகநாதா் கோயில் உள்ளிட்ட கோயில்களில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.