முகப்பு
புதுக்கோட்டை

பெண்ணை அரிவாளால் வெட்டியவா் கைது

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் பெண்ணை அரிவாளால் வெட்டியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On : 6 நவம்பர், 2024 at 8:48 PM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் பெண்ணை அரிவாளால் வெட்டியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ஆலங்குடி அம்பேத்கா் நகரைச் சோ்ந்தவா் மா. மாலதி (25).இவரது பக்கத்து வீட்டுக்காரரான பிளேடு மணிகண்டன் என்ற மணிகண்டன்(29) என்பவரின் தாயாா் இரு தினங்களுக்கு முன்பு உயிரிழந்ததால் வீட்டருகே கொட்டகை போட்டுள்ளாா். இதில், மாலதிக்கும், மணிகண்டனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தொடா்ந்து, புதன்கிழமை வீட்டில் இருந்த மாலதியை மணிகண்டன், அவரது சகோதரா் பசுபதி ஆகியோா் அரிவாளால் வெட்டியதில் பலத்த காயமடைந்த மாலதி ஆலங்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து ஆலங்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து மணிகண்டனை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.