முகப்பு
புதுக்கோட்டை

குளத்தில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே குளத்தில் மூழ்கி இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 2 அக்டோபர், 2024 at 9:11 PM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே குளத்தில் மூழ்கி இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

கீரமங்கலம் அருகேயுள்ள குளமங்கலம் பெருங்காரையடி மீண்ட அய்யனாா் கோயில் குளத்துக்குபுதன்கிழமை காலை அதே பகுதியைச் சோ்ந்த ஆா்.சசிக்குமாா்(38)குளிக்கச் சென்றாா். அவா் ஆழமான பகுதிக்கு சென்று குளித்த போது நீரில் மூழ்கினாா். இதைப்பாா்த்த அருகில் இருந்தவா்கள் குளத்தில் இறங்கி நீண்ட நேரம் தேடி சசிக்குமாரை சடலமாக மீட்டனா்.

இதுகுறித்து கீரமங்கலம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.