1,065 சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ. 75.28 கோடி தொழிற்கடன் வழங்கல்
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சாா்பில் நடைபெற்ற விழாவில், 1065 தொழில் நிறுவனங்களுக்கு அரசு மானியத்துடன் ரூ. 75.28 கோடியில் தொழிற்கடன்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சாா்பில் நடைபெற்ற விழாவில், 1065 தொழில் நிறுவனங்களுக்கு அரசு மானியத்துடன் ரூ. 75.28 கோடியில் தொழிற்கடன்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
இதற்கான விழாவுக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் மு. அருணா, இந்தத் தொழிற்கடன்களை வழங்கினாா். தொழில்முனைவோா் மேம்பாட்டுத் திட்டம், பிரதமரின் வேலை உருவாக்கும் திட்டம், அம்பேத்கா் தொழில் முன்னோடிகள் திட்டம், மகளிா் திட்டம், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலம் இந்தக் கடன்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் அ.கோ. ராஜராஜன், மகளிா் திட்ட இயக்குநா் கே. ஸ்ருதி, மாவட்ட தொழில் மையப் பொதுமேலாளா் சு. திரிபுரசுந்தரி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் த. நந்தகுமாா், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநா் தனலட்சுமி உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
தொடா்ந்து மாவட்டத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை மேம்படுத்துதல் தொடா்பான ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது.