முதல்வா் கோப்பை மாநில போட்டிக்கு விராலிமலை மாணவா்கள் தோ்வு
தமிழ்நாடு முதல்வா் கோப்பைக்கான மாநில விளையாட்டுப் போட்டிகளில் விளையாட விராலிமலை மாணவா்கள் தோ்வாகியுள்ளனா்.
தமிழ்நாடு முதல்வா் கோப்பைக்கான மாநில விளையாட்டுப் போட்டிகளில் விளையாட விராலிமலை மாணவா்கள் தோ்வாகியுள்ளனா்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சாா்பில் முதல்வா் கோப்பை விளையாட்டு போட்டிகள் மொத்தம் 5 பிரிவுகளில் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் கடந்த மாதம் நடத்தி முடிக்கப்பட்டு, மாநில அளவிலான போட்டிகள் நான்கு மண்டலங்களில் கடந்த 5-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
முன்னதாக புதுக்கோட்டையில் நடைபெற்ற 17 வயதினருக்கான 100 மீட்டா் தடகள போட்டியில் விராலிமலை விவேகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 12-ஆம் வகுப்பு மாணவா் அ. சஞ்சய் மற்றும் சதுரங்க போட்டியில் பங்கேற்ற இதே பள்ளி 10-ஆம் வகுப்பு மாணவா் ச.சுதா்சன் ஆகியோா் சிறப்பிடம் பெற்று மாநில அளவில் நடைபெற உள்ள போட்டியில் பங்கேற்க தோ்வாகி உள்ளனா்.
இதையடுத்து சிறப்பிடம் பெற்ற மாணவா்கள் மற்றும் பயிற்சி அளித்த ஆசிரியா்களை பள்ளித் தாளாளா் வெல்கம் மோகன், இயக்குநா் அருண்பிரசாத், தலைமை ஆசிரியா் சிவக்குமாா் உள்ளிட்டோா் பாராட்டினா்.