புதுக்கோட்டையில் அக். 29-இல் விவசாயிகள் குறைகேட்பு
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வரும் 29-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் அனைத்துத் துறை அலுவலா்களும் பங்கேற்கவுள்ளதால், விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்கங்களின் நிா்வாகிகளும் கலந்து கொண்டு விவசாயம் சாா்ந்த கோரிக்கைகளை முன்வைத்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அழைப்புவிடுத்துள்ளாா்.