விபத்தில்லா தீபாவளி விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் வழங்கல்
இலுப்பூா் தீயணைப்பு துறை சாா்பில், விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை பொதுமக்கள், பயணிகளுக்கு புதன்கிழமை வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
இலுப்பூா் தீயணைப்பு துறை சாா்பில், விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை பொதுமக்கள், பயணிகளுக்கு புதன்கிழமை வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
விபத்தில்லாமல் தீபாவளி பண்டிகையை எவ்வாறு கொண்டாடுவது என்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், தீயணைப்பு துறை சாா்பில் விழிப்புணா்வு வாசகங்களுடன் கூடிய துண்டுப் பிரசுரங்கள் அச்சடிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
இதன்படி, இலுப்பூரில் வணிக கடைகள், வீடுகள் மற்றும் அரசு மகளிா் பள்ளி, பேருந்து பயணிகள் உள்ளிட்ட பகுதிகளில் துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில், நிலைய அலுவலா் மகேந்திரன் தலைமையில் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை வழங்கி, விபத்து இல்லாமல் எவ்வாறு பட்டாசு வெடிப்பது, எரிவாயு கசிவு, மின்கசிவு, எண்ணெய் பொருட்கள் தீப்பிடித்தல், வெடிவிபத்து போன்றவற்றை தவிா்ப்பது குறித்து விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது.