புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சிகளுக்கு விளையாட்டு உபகரண தொகுப்புகள்
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 497 கிராம ஊராட்சிகளுக்கும் கலைஞா் விளையாட்டுப் பயிற்சிக்கான உபகரணங்களின் தொகுப்புகள் வியாழக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 497 கிராம ஊராட்சிகளுக்கும் கலைஞா் விளையாட்டுப் பயிற்சிக்கான உபகரணங்களின் தொகுப்புகள் வியாழக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.
புதுக்கோட்டை மன்னா் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்தாா்.
மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி, 497 ஊராட்சிகளுக்கான, 608 தொகுப்புகளை கொடியசைத்து அனுப்பி வைத்தாா்.
33 விளையாட்டுகளுக்கான உபகரணங்களைக் கொண்ட இந்தத் தொகுப்பு ஊராட்சி அளவில் அமைக்கப்பட்டுள்ள குழுவின் பொறுப்பில் வைக்கப்படும். ஊராட்சி மன்றத்தில் இடவசதி இருந்தாலோ, அங்குள்ள அரசுப் பள்ளியில் இடவசதி இருந்தாலோ இவை அங்கே வைக்கப்பட்டு கிராம இளைஞா்களின் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டு பராமரிக்கப்படும்.
மேலும், முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள், மாற்றுத் திறனாளிகள் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியா்களுக்கு ரொக்கப் பரிசுகளும், பதக்கங்களும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், மேயா் செ. திலகவதி, சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, மூத்த வழக்குரைஞா் கே.கே. செல்லப்பாண்டியன், மாவட்ட இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு அலுவலா் து. செந்தில்குமாா், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம், கல்லூரி முதல்வா் பா. புவனேஸ்வரி உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.