பொன்னமராவதி வட்டார கோயில்களில் மாா்கழி மாத 10-ஆம் நாள் திருப்பள்ளியெழுச்சி வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.
பொன்னமராவதி சோழீசுவரா் கோயிலில் ஆவுடையநாயகி சமேத சோழீசுவரா் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. கோயிலின் திருவாசக முற்றோதல் குழுவினா் பக்தி பாசுரங்களை பாடினா்.
அதேபோல புதுப்பட்டி புவனேஸ்வரி உடனாய பூலோகநாதா்கோயில், பாலமுருகன் கோயில், அழகிய நாச்சியம்மன் கோயில், வலையபட்டி மலையாண்டி கோயில் உள்ளிட்ட கோயில்களில் திருப்பள்ளியெழுச்சி வழிபாடு நடைபெற்றது.