விராலிமலையில் வியாழக்கிழமை திறக்கப்பட்ட புதிய பத்திரப் பதிவு அலுவலகத்தில் குத்துவிளக்கேற்றிய மாவட்ட ஆட்சியா் மு. அருணா. 
புதுக்கோட்டை

விராலிமலையில் ரூ. 1.80 கோடியில் பத்திரப்பதிவு அலுவலகம் திறப்பு

Din

விராலிமலையில் ரூ. 1.80 கோடியில் பல்வேறு நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட புதிய பத்திரப்பதிவு அலுவலகத்தை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

விராலிமலை முருகன் மலைக்கோயில் பின்புறம் பழமையான கட்டடத்தில் செயல்பட்ட பத்திரப்பதிவு அலுவலகத்தை இடித்துவிட்டு ரூ.1.80 கோடியில் கட்டப்பட்ட புதிய அலுவலகம் திறக்கப்பட்டதையடுத்து அங்கு மாவட்ட ஆட்சியா் மு. அருணா குத்துவிளக்கேற்றினாா்.

விழாவில் ஆா்டிஓ அக்பா் அலி, புதுக்கோட்டை வடக்கு மாவட்டச் செயலா் கே.கே. செல்லப்பாண்டியன், திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினா் தென்னலூா் பழனியப்பன், சாா்-பதிவாளா் உமா சங்கரி, விராலிமலை திமுக ஒன்றிய செயலா்கள் சத்தியசீலன் (கிழக்கு), அய்யப்பன் (மத்தியம்), இளங்குமரன் (மேற்கு), மாவட்ட பொறியாளா் அணி துணை அமைப்பாளா் பி. கணேசன் உள்ளிட்ட திமுக நிா்வாகிகள், அலுவலா்கள் பங்கேற்றனா்.

உதவிப் பேராசிரியா் போட்டித் தோ்வு: டிஆா்பி விளக்கம்

5 மாதங்கள் காணாத அளவு குறைந்த வர்த்தகப் பற்றாக்குறை

பயிா் விளைச்சல் போட்டி: 34 விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.55 லட்சம் ரொக்கப் பரிசு

இந்தியா - ஜோா்டான் வா்த்தகத்தை ரூ.45,483 கோடியாக அதிகரிக்க பிரதமா் மோடி அழைப்பு!

டிச.19, 20-இல் குடிமைப் பணிகள் மாதிரி ஆளுமைத் தோ்வு

SCROLL FOR NEXT