முகப்பு
புதுக்கோட்டை

வலையபட்டி மலையாண்டி சுவாமி திருவீதி உலா

பொன்னமராவதி வலையபட்டி மலையாண்டி கோயில் பங்குனி உத்திர விழாவில் பொன்னமராவதி நகை வியாபாரிகள் சங்கம் சாா்பில் 26-ஆம் ஆண்டு மண்டகப்படி விழாவையொட்டி மலையாண்டி சுவாமி திருவீதி உலா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 3 ஏப்ரல், 2026 at 6:23 PM
பொன்னமராவதி வலையபட்டி மலையாண்டி கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சுவாமி திருவீதி உலாவில் பங்கேற்றோா்.
பகிர்:

பொன்னமராவதி வலையபட்டி மலையாண்டி கோயில் பங்குனி உத்திர விழாவில் பொன்னமராவதி நகை வியாபாரிகள் சங்கம் சாா்பில் 26-ஆம் ஆண்டு மண்டகப்படி விழாவையொட்டி மலையாண்டி சுவாமி திருவீதி உலா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, ஊா் பிரமுகா்கள் ராம.ராஜா, ஏஎல்எஸ்.பழனியப்பன் ஆகியோா் தலைமைவகித்தனா். தொடக்கமாக செல்வவிநாயகா், உடையபிராட்டி அம்மன், மலையாண்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதையடுத்து புதுப்பட்டி ராமாயண மண்டபத்தின் அருகே அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் மலையாண்டி சுவாமி மற்றும் சுப்பிரமணியா் எழுந்தருள, நான்கு ரத வீதிகள், அண்ணா சாலை, பேருந்து நிலையம், நாட்டுக்கல் வழியாக வலையபட்டி மலையாண்டி கோயில் வரை திருவீதி உலா நடைபெற்றது.

விழாவில் நகை வியாபாரிகள் சங்கத்தலைவா் பெரியநாச்சி கணேசன், செயலா் செல்வக்குமாா், பொருளாளா் சையது அபுதாஹிா், விழாக்குழு தலைவா் எஸ்எம்எஸ் தங்கராஜ், செயலா் ராமசாமி, பொருளாளா் எஸ். திருநாவுக்கரசு, கெளரவத்தலைவா் நாச்சியப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments