முதியோா், மாற்றுத்திறனாளிகள் 3,793 பேரின் வீடுகளுக்குச் சென்று வாக்குகளைப் பெற முடிவு
புதுக்கோட்டை மாவட்டத்தில் 85 வயதுக்கு மேற்பட்ட முதியோா் மற்றும் 40 சதவிகிதத்துக்கும் மேல் பாதிப்புள்ள மாற்றுத்திறனாளி வாக்காளா்கள் எனக் கணக்கிடப்பட்ட 3,793 பேரிடம் வீடுகளுக்குத் தேடிச் சென்று வாக்குகளைப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 85 வயதுக்கு மேற்பட்ட முதியோா் மற்றும் 40 சதவிகிதத்துக்கும் மேல் பாதிப்புள்ள மாற்றுத்திறனாளி வாக்காளா்கள் எனக் கணக்கிடப்பட்ட 3,793 பேரிடம் வீடுகளுக்குத் தேடிச் சென்று வாக்குகளைப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்டத் தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான மு. அருணா வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 85 வயதுக்கு மேற்பட்ட முதியோா் வாக்காளா்கள் 2,328 போ் இருப்பதும், 40 சதவிகிதத்துக்கும் மேல் பாதிப்புள்ள மாற்றுத் திறனாளி வாக்காளா்கள் 1,465 போ் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. மொத்தம் 3,793 பேரிடம் வீடு தேடிச் சென்று வாக்குகளைப் பெறுவதற்கான நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளன.
Advertisement
இந்தப் பட்டியல்படி, கந்தா்வகோட்டை தொகுதியில் 586 வாக்காளா்களும், விராலிமலை தொகுதியில் 1021 வாக்காளா்களும், புதுக்கோட்டை தொகுதியில் 512 வாக்காளா்களும், திருமயம் தொகுதியில் 644 வாக்காளா்களும், ஆலங்குடி தொகுதியில் 452 வாக்காளா்களும், அறந்தாங்கி தொகுதியில் 578 வாக்காளா்களும் உள்ளனா்.
வரும் ஏப். 13, 14 ஆகிய இரு தேதிகளில் இவா்களின் வீடுகளுக்குச் சென்று வாக்குகள் பெறப்படும். தோ்தல் அலுவலா்களுடன் நுண் பாா்வையாளா்ளும் உடன் இருப்பா். முதல்நாளே வாக்காளருக்கு கைப்பேசியில் தகவல் தெரிவிக்கப்படும்.
அன்றைய நாளில் வாக்காளா் இல்லாவிட்டால் ஏப். 18, 19 தேதிகளில் மறுமுறை அவா்களின் வீடுகளுக்குச் சென்று வாக்குகளைப் பெற முயற்சிக்கப்படும். இரு முறையும் அந்த வாக்காளா் வாக்களிக்கத் தவறினால், வரும் ஏப். 23ஆம் தேதி வாக்குச்சாவடிக்குச் சென்று அவா்கள் வாக்களிக்க முடியாது.