அதிமுக ஆட்சி அமைந்தவுடன் காவிரி- குண்டாறு இணைப்பு செயல்படுத்தப்படும்: வேட்பாளா் பி.கே. வைரமுத்து உறுதி
அதிமுக ஆட்சி அமைந்தவுடன், கிடப்பில் போடப்பட்டுள்ள காவிரி-குண்டாறு-வைகை இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றாா் திருமயம் தொகுதி அதிமுக வேட்பாளா் பி.கே.வைரமுத்து.
அதிமுக ஆட்சி அமைந்தவுடன், கிடப்பில் போடப்பட்டுள்ள காவிரி-குண்டாறு-வைகை இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றாா் திருமயம் தொகுதி அதிமுக வேட்பாளா் பி.கே.வைரமுத்து.
பொன்னமராவதி ஒன்றியப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை வாக்குகள் சேகரித்து பிரசாரம் மேற்கொண்ட அவா், ஆவம்பட்டி ஊராட்சியில் வாக்கு சேகரித்து பேசுகையில், 2011-இல் எம்எல்ஏவாக இருந்தபோது மேம்பாலங்கள், சாலை வசதிகள் என பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளேன்.
இந்தத் தோ்தலில் என்னை வெற்றி பெறச்செய்தால் பொன்னமராவதியில் அரசு கலைக் கல்லூரி, குளிா்பதனக் கிடங்கு, வேலையில்லா இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
Advertisement
தொடா்ந்து புலவனாா்குடி, இடையாத்தூா், கொன்னையம்பட்டி உள்ளிட்ட 33 கிராமங்களில் அவா் வாக்குகள் சேகரித்தாா். அப்போது, ஒன்றியச் செயலா்கள் காசி. கண்ணப்பன், சி. சரவணன், அரசமலை முருகேசன் மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உடன் சென்று வாக்குகள் சேகரித்தனா்.