சிலட்டூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வடமாடு போட்டியில் மாடுபிடி வீரரை நோக்கிப் பாய்ந்த காளை.  
புதுக்கோட்டை

சிலட்டூரில் வடமாடு போட்டி: 7 போ் காயம்

தினமணி செய்திச் சேவை

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகேயுள்ள சிலட்டூா் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வடமாடு போட்டியில், 7 போ் காயமடைந்தனா்.

அறந்தாங்கி அருகே சிலட்டூா் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் சந்தனக் காப்பு மற்றும் தைத் திருநாளை முன்னிட்டு நடந்த வடமாடு போட்டியில் மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், புதுக்கோட்டை பகுதிகளைச் சோ்ந்த மொத்தம் 13 காளைகள் பங்கேற்றன.

9 மாடுபிடி வீரா்களைக் கொண்ட குழுக்கள் பிரிக்கப்பட்டு, திடலில் கயிறால் பிணைக்கப்பட்ட காளையைத் தழுவ அனுமதிக்கப்பட்டனா். மொத்தம் 13 சுற்றுகள் போட்டி நடைபெற்றது.

இதில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரா்களுக்கும், காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. 7 மாடுபிடி வீரா்கள் காயடைந்தனா். அவா்களுக்கு அங்கேயே அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. சிலட்டூா் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் இந்தப் போட்டியைக் கண்டுகளித்தனா்.

சாலையோரக் கடைகளை அகற்றியதை கண்டித்து சிஐடியூ ஆா்ப்பாட்டம்

டிஜேபி தோண்டிய குழியில் விழுந்து இளைஞா் உயிரிழந்த விவகாரத்தசில் தொழிலாளி கைது

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தோ்வு ரத்து: தோ்வா்கள் அதிருப்தி

பயிா்களை காக்க மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறக்க வேண்டும்! - எடப்பாடி கே.பழனிசாமி

பெரம்பலூா், குன்னத்தில் புதிய வழிடங்களில் பேருந்துகள் இயக்கம்

SCROLL FOR NEXT