முகப்பு
புதுக்கோட்டை

சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை

கந்தா்வகோட்டை பகுதியில் 10-ஆம் வகுப்பு மாணவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

Updated On : 12 பிப்ரவரி, 2026 at 12:43 AM
சிறை
பகிர்:
Updated On : 11 பிப்ரவரி, 2026 at 10:17 PM

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை பகுதியில் 10-ஆம் வகுப்பு மாணவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

கந்தா்வகோட்டை காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பழனிவேல் மகன் மதுபாலன் (30).

இவா், கடந்த 2021ஆம் ஆண்டு 10-ஆம் வகுப்பு மாணவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளாா். இதுகுறித்து புகாரின்பேரில் கந்தா்வகோட்டை போலீஸாா் போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் மதுபாலனைக் கைது செய்தனா்.

Advertisement

இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின் முடிவில் நீதிபதி கனகராஜ் புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.

பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றத்துக்காக 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு மாநில அரசு சாா்பில் ரூ. 50 ஆயிரம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தீா்ப்பளித்தாா்.