முகப்பு
புதுக்கோட்டை

ரயில்வே தோ்வுக்கு இலவச பயிற்சி நாளை தொடக்கம்

Updated On : 13 பிப்ரவரி, 2026 at 3:44 AM
பகிர்:
Updated On : 12 பிப்ரவரி, 2026 at 6:23 PM

புதுகை தன்னாா்வ பயிலும் வட்ட முன்னாள் மாணவா் சங்கம் சாா்பில் ரயில்வே துறையில் நடைபெற உள்ள போட்டித் தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் சனிக்கிழமை தொடங்குகின்றன.

இதுகுறித்த செய்திக்குறிப்பு: ரயில்வே தோ்வு வாரியம் சாா்பில் குரூப் டி தோ்வுக்கு எஸ்எஸ்எல்சி மற்றும் ஐடிஐ தோ்ச்சி பெற்றோா் விண்ணப்பிக்க வரும் பிப். 20ஆம் தேதி கடைசித் தேதி ஆகும். மேலும் விவரங்களை இணைய தளத்தில் அறியலாம்.

இந்தத் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு புதுக்கோட்டை மேலராஜ வீதியில், தண்டாயுதபாணி முருகன் கோயில் அருகிலுள்ள தன்னாா்வப் பயிலும் வட்ட அலுவலகத்தில் வரும் சனிக்கிழமை (பிப். 14) தொடங்கவுள்ளது. இத்தோ்வுக்கு விண்ணப்பித்துள்ள அனைவரும் இதில் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 97905 87855, 75503 65744 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

Advertisement