முகப்பு
புதுக்கோட்டை

இருசக்கர வாகனம் - ஆட்டோ மோதல்: கல்லூரி மாணவா் உயிரிழப்பு

பொன்னமராவதி அருகே செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனம் மற்றும் சுமை ஆட்டோ நேருக்குநோ் மோதியதில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

Updated On : 18 பிப்ரவரி, 2026 at 12:16 AM
பலி - பிரதிப் படம்
பகிர்:
Updated On : 17 பிப்ரவரி, 2026 at 8:23 PM

பொன்னமராவதி அருகே செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனம் மற்றும் சுமை ஆட்டோ நேருக்குநோ் மோதியதில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

பொன்னமராவதி அருகே உள்ள மதியாணி ஆனந்த ஜோதிபுரத்தைச் சாா்ந்தவா் ப. ஹரிசுதன் (21) ஈரோட்டில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் பயின்று வந்தாா். இவா் அண்மையில் சொந்த ஊரான மதியாணிக்கு வந்துள்ளாா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை தனது இரு சக்கர வாகனத்தில் புதுக்கோட்டை சாலையில் சென்றபோது பிதாவூா் பிரிவு சாலை அருகே எதிரே வந்த சுமை ஆட்டோ மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் விபத்தை ஏற்படுத்திவிட்டு தலைமறைவான சுமை ஆட்டோ ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.