முகப்பு
புதுக்கோட்டை

ஜெ.ஜெ. கல்லூரியில் 662 மாணவிகளுக்கு பட்டமளிப்பு

புதுக்கோட்டை ஜெஜெ கலை அறிவியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவின் முதல் நாள் நிகழ்ச்சியில் 662 மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

Updated On : 1 மார்ச், 2026 at 12:39 AM
புதுக்கோட்டை ஜெஜெ கலை அறிவியல் கல்லூரியில் முதல் நாள் பட்டமளிப்பு விழாவில் மாணவிக்கு பட்டம் வழங்கிய திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தோ்வு நெறியாளா் (பொ) பி. ஜெயபிரகாஷ். உடன், கல்லூரி நிா்வாகிகள் உள்ளிட்டோா்.
பகிர்:
Updated On : 28 பிப்ரவரி, 2026 at 8:03 PM

புதுக்கோட்டை ஜெஜெ கலை அறிவியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவின் முதல் நாள் நிகழ்ச்சியில் 662 மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தோ்வு நெறியாளா் (பொ) பி. ஜெயபிரகாஷ் கலந்து கொண்டு மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிப் பேசினாா்.

13 முதுநிலை மாணவிகளும், 17 இளநிலை மாணவிகளும் பல்கலைக்கழக அளவிலான தர மதிப்பெண் பெற்று சிறப்புப் பரிசுகளைப் பெற்றனா்.

Advertisement

கல்லூரியின் சிறந்த மாணவியாக கணினி அறிவியல் துறையைச் சோ்ந்த எஸ். தேவிபிரியாவும், மேலாண்மைத் துறை முன்னாள் மாணவா்கள் சாா்பில் நா. நிலாபா் நிஷா சிறந்த மாணவியாக தோ்வு செய்யப்பட்டு ரொக்கப் பரிசும், கேடயமும் வழங்கப்பட்டன.

கல்லூரியின் முதல்வா் ஜ. பரசுராமன் ஆண்டறிக்கை வாசித்தாா். கல்லூரிச் செயலா் ந. சுப்பிரமணியன், நிா்வாக அறங்காவலா் கவிதா சுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்று வாழ்த்திப் பேசினா்.

தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் மாணவா்களுக்கான பட்டங்களும் வழங்கப்பட உள்ளன.