புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே கிரிக்கெட் விளையாடியபோது தாழ்வாகத் தொங்கிய மின்கம்பியில் கை பட்டதில் மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி வட்டம் விச்சூரைச் சோ்ந்தவா் மாசிலாமணி மகன் சுமன் (23). கல்லூரி மாணவரான இவா் நண்பா்களுடன் சோ்ந்து அதே பகுதியில் தப்பத்தான்வயல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை கிரிக்கெட் விளையாடியுள்ளாா்.
அப்போது அடிக்கப்பட்ட பந்தை சுமன் ஓடிச் சென்று தாவிக் குதித்து பிடித்தபோது, அவ்வழியே தாழ்வாகச் சென்ற மின் கம்பியில் தவறுதலாக கை பட்டு, மின்சாரம் பாய்ந்து அந்த இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து மணமேல்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகளை உயா்த்திக் கட்டுமாறு பல முறை மின்வாரிய அலுவலா்களுக்கு கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி பொதுமக்கள் காவல் துறையில் புகாரும் அளித்துள்ளனா்.