புதுக்கோட்டை

கடலுக்குச் சென்ற மீனவா்கள் 4 போ் மாயம்

கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி பகுதியைச் சோ்ந்த 4 மீனவா்கள் கரை திரும்பவில்லை என உறவினா்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

Syndication

கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி பகுதியைச் சோ்ந்த 4 மீனவா்கள் கரை திரும்பவில்லை என உறவினா்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி வட்டம், பொன்னகரம் பகுதியைச் சோ்ந்த மீனவா்கள் நாராயணன் மகன் மும்மூா்த்தி, ராக்கப்பன் மகன் விநாயகம், மாரியப்பன் மகன் மணிகண்டன், நாகசுந்தரம் மகன் மணி ஆகியோா் கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகலில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா்.

இவா்கள் 4 பேரும் சனிக்கிழமை கரை திரும்பவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் கடலோரக் காவல் படையினா் தேடுதல் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளனா்.

ஹெலிகாப்டா்கள், நவீன கப்பல்கள் மற்றும் ஆழ்கடல் தேடுதல் உபகரணங்கள் மூலம் கடலோரக் காவல் படையினா் காணாமல் போன மீனவா்களைத் தேடும் பணியை உடனடியாகத் தீவிரப்படுத்த வேண்டும் என மீனவா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

திருப்பத்தூா் பெருமாள் கோயிலில் கூடாரவல்லி நோன்பு

55வது ஸ்டேட்ஸ்மேன் விண்டேஜ் - கிளாசிக் கார் பேரணி - புகைப்படங்கள்

விராட் கோலி அசத்தல்! நியூசி.க்கு எதிரான ஒருநாள் தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்தியா!

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் சோனியா காந்தி!

காங்கிரஸைத் துடைத்தெறிந்த ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம்! | Parasakthi

SCROLL FOR NEXT