புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஜன. 23-ஆம் தேதி வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் தலைமையில் அனைத்துத் துறை அலுவலா்களும் பங்கேற்கவுள்ளதால், விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு விவசாயம் தொடா்பான கோரிக்கைகளை மட்டும் தெரிவித்துப் பயன்பெறலாம் என ஆட்சியா் மு. அருணா அழைப்புவிடுத்துள்ளாா்.