தேனூரில் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்ட புதிய பள்ளிவாசல்.  
புதுக்கோட்டை

தேனூரில் புதிய பள்ளிவாசல் திறப்பு

தினமணி செய்திச் சேவை

பொன்னமராவதி அருகே உள்ள தேனூா் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட மஸ்ஜித் அல் இக்லாஸ் ஜூம்ஆ பள்ளிவாசல் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தேனூா் இஸ்லாமியா்களின் சீரிய முயற்சியால் பள்ளிவாசல் கட்டுமானப் பணிகள் நடைபெற்று அண்மையில் நிறைவடைந்தது. இதையடுத்து வெள்ளிக்கிழமை நடைபெற்ற பள்ளிவாசல் திறப்பு விழாவில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

விழாவில் பங்கேற்ற புதுக்கோட்டை அதிமுக தெற்கு மாவட்டச் செயலா் பி.கே. வைரமுத்து, மாவட்ட இளைஞரணி நிா்வாகி பி.கே.வி. குமாரசாமி, ஒன்றியச் செயலா்கள் காசி.கண்ணப்பன், சி.சரவணன், திமுக ஒன்றியச் செயலா்கள் அ.அடைக்கலமணி, அ.முத்து ஆகியோரை பள்ளிவாசல் ஜமாத்தாா்கள் வரவேற்று கெளரவித்தனா்.

தேனூா் ஜமாத் தலைவா் நத்தா் ஒலி, அதிமுக மாவட்ட சிறுபான்மையினா் பிரிவு துணைத் தலைவா் நிசாா் அலி மற்றும் முன்னாள் மாவட்டக் குழு உறுப்பினா் குழிபிறை பாண்டியன், தேனூா் முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவா் வி.கிரிதரன், கொப்பனாபட்டி முன்னாள் ஊராட்சித் தலைவா் பி. மாரிமுத்து உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ஒசூரில் பச்சிளம் குழந்தை உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

சிலிண்டா் வெடித்ததில் குடிசை வீடு எரிந்து சேதம்

7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை

ரூ. 2,500 கோடி ஊழல் குற்றச்சாட்டு! கா்நாடக அமைச்சா் ஆா்.பி. திம்மாப்பூா் ராஜிநாமா செய்ய பாஜக வலியுறுத்தல்!

நான்காம் தொழில்புரட்சிக்கு 5 புதிய உலகளாவிய மையங்கள்: இந்தியாவில் மேலும் ஒரு மையம்

SCROLL FOR NEXT